முகப்பு /செய்தி /தமிழ்நாடு / மல்லிகை கிலோ ரூ.1,300... தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!

மல்லிகை கிலோ ரூ.1,300... தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கிடுகிடுவென உயர்ந்த பூக்களின் விலை...!

பூக்கள் விலை

பூக்கள் விலை

விலை அதிகரித்தாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பல்வேறு மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.

புதுக்கோட்டைப் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மலர் சந்தையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்குப் பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஒரு கிலோ மல்லிகைப் பூ 1,300 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.

Also Read : திமுகவினரின் சொத்துப் பட்டியல் வெளியிடும் நேரம்... அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு வீடியோ...!

தொடர்ந்து, இதேபோன்று விலை கிடைத்தால் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையிலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ பிச்சிப்பூ 2,000, மல்லிகை 1,200 ரூபாய்க்கும், ரோஜா 150 ரூபாய்க்கும் விற்பனையானது. விலை அதிகரித்தாலும் பொதுமக்களும், வியாபாரிகளும் ஆர்வமுடன் வந்து பூக்களை வாங்கிச் சென்றனர்.

First published:

Tags: Tamil New Year