முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரேனா தொற்று உறுதி

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரேனா தொற்று உறுதி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ்.இளங்கோவன்

EVKS Elangovan | கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதனை தொடர்ந்து வெற்றிபெற்ற  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிப். 10 சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில், எம்.எல்.ஏவாக பதவியேற்றார்.

இதையடுத்து அண்மையில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மேலும் லேசான தொற்றுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Corona, EVKS Elangovan, Tamilnadu