மணிப்பூர் கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணிப்பூர் மாநிலம் மோரே பகுதியில் உள்ள தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என தகவல் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் படும் அல்லலைப் போக்குவதற்கும் அவர்களை மீட்பதற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறு துரும்பைக் கூட கிள்ளிப் போடாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அவதியுறும் தமிழர்கள் குறித்த தகவல்கள் முதலமைச்சருக்கு தெரிவிக்கப்படவில்லையா என வினவியுள்ள ஈபிஎஸ், கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களைக் காக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: EPS