திமுக அரசின் முறைகேடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 22ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில், அதிமுக சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.எனவே, திமுக அரசின் முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மே 22ஆம் தேதி காலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா காங்கிரஸின் இரு துருவங்கள்... சித்தராமையா, டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Edappadi Palaniswami