முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

"இப்படி பேசி பேசித்தான் அண்ணாமலை பெரிய ஆளாகிறார்” - ஈபிஎஸ் காட்டமான விமர்சனம்!

அண்ணாமலை, ஈபிஎஸ்

அண்ணாமலை, ஈபிஎஸ்

EPS About Annamalai | அண்ணாமலை ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம் என காட்டம்

  • Last Updated :
  • Salem, India

அண்ணாமலை குறித்து பேசி பேசி தான் அவர் பெரிய ஆளாகிறர் என பேசிய எடப்பாடி பழனிசாமி இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

சேலத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடன் திமுகவினர் குறித்த சொத்து பட்டியல் குறித்து ம், தமிழ்நாட்டில் ஆண்ட கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஏன் அவரைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். இப்படி பேசி பேசித்தான் அவர் பெரிய ஆளாகிறார். எனவே அவரைப் பற்றியே பேச வேண்டாம். நான் கட்சிக்கு வந்து 50 ஆண்டுகளாகிறது. அண்ணாமலை இதுபோன்ற பேட்டிகளைக் கொடுத்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கிறார். தயவுசெய்து அவர் தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்காதீர்கள். வேறெந்த கட்சியைக் குறித்தாவது கேளுங்கள். காரணம் அரசியல் கட்சிகளில் இருப்பவர்களுக்கு அடிப்படைத் தன்மை தெரிய வேண்டும். அப்படியானவர்கள் குறித்து கேள்வி கேட்டால் நான் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதையும் படிங்க: பிரபல தாதா சுட்டுக் கொலை... செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது கும்பல் வெறிச்செயல்... உ.பியில் பயங்கரம்!

அதைவிடுத்து தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை பேசி வருகிறார். அவர் ஏதாவது ஒன்றைப் பேசிவிடுகிறார். இதனால், அவர் குறித்த ஊடகங்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலைக்கு எங்களைப் போன்ற தலைவர்கள் வந்துவிட்டோம். முதிர்ந்த அரசியல்வாதி கருத்து குறித்துக் கேட்டால் பதில் சொல்லலாம். எனவே, தயவுசெய்து ஊடகங்கள் என்னிடம் அவர் குறித்த கேள்விகளைக் கேட்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக கூறினார்.

top videos
    First published:

    Tags: EPS