முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல் : அதிரடி காட்டும் சென்னை போக்குவரத்து போலீசார்!

குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ரூ.9 கோடி அபராதம் வசூல் : அதிரடி காட்டும் சென்னை போக்குவரத்து போலீசார்!

சென்னை பெருநகர காவல்துறை

சென்னை பெருநகர காவல்துறை

மேலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்தவாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணைபிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது

  • Last Updated :
  • Tamil Nadu |

சென்னை பெருநகர காவல்துறை விபத்தை குறைக்கும் வண்ணம் வாகனச் சட்டத்தை திறம்பட அமலாக்கம் செய்து சாலை மோட்டர் போக்குவரத்து விபத்துகளைக் குறைத்து வருகிறது. சாலை விபத்துக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முக்கியகாரணங்களில் ஒன்று குடிபோதையில் வாகனம் ஓட்டுவதாகும். எனவே குடிபோதையில் வாகனம் ஓட்டுவதற்கு சட்டத்தில் கடுமையான தடுப்பு நடவடிக்கையாக தண்டனை வழங்கப்படுகிறது. அபராதத் தொகை ரூ.10,000 அதிகமாக இருப்பதால் பலர் அபராதத்தைச் செலுத்துவதில்லை. நீதிமன்றத்தில் உள்ள மெய்நிகர் பிரிவிலிருந்து அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைப்பு வந்தாலும் அபராதம் செலுத்துவதில்லை. மேலும், 8,119 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

எனவே, இதுபோன்ற விதி மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை பெருநகரில் 10 இடங்களில் அமைந்துள்ள அழைப்பு மையங்கள் (Call centers) மூலம் தகவல் தெரிவித்து, கடந்த 08.04.2023 அன்று அவர்களை நேரில் வரவழைத்து வழக்குகளை முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு நடவடிக்கையின் மூலம் 661 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராதத் தொகையாக ரூ.68,17,400 விதிமீறுபவர்களால் செலுத்தப்பட்டன. கடந்த 2 மாதங்களில் அழைப்புமையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 8,674 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.8,97,27,400 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது.

இதையும் வாசிக்க: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் மட்டுமின்றி, வேறு எந்தவாகனங்களாக இருந்தாலும், அசையும் சொத்துக்கள் உட்பட பறிமுதல் செய்ய நீதிமன்றங்களில் ஆணைபிறப்பிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது. ஏற்கனவே, இதுபோன்று குடிபோதையில் வாகனம் ஓட்டி அபராதம் செலுத்தாதவர்களின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கு 361 நீதிமன்ற ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன என்று தெரியப்படுத்தப் பட்டுள்ளது.

First published:

Tags: Traffic Police