முகப்பு /செய்தி /தமிழ்நாடு / வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வானிலை அலெர்ட்...!

வலுப்பெற்றது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... வானிலை அலெர்ட்...!

மோச்சா புயல்

மோச்சா புயல்

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மாலை 5.30 அளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

போர்ட் பிளேயருக்கு தென்மேற்கே சுமார் 510 கிமீ, காக்ஸ் பஜாரின் (வங்காள தேசம்) தென் தென்மேற்கே 1,480 கி.மீ மற்றும் சிட்வே (மியான்மர்) க்கு தென்-தென்மேற்கில் 1360 கி.மீ. இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மே 10 ஆம் தேதி மாலையில் அதே பகுதியில் படிப்படியாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. அந்த புயலுக்கு தற்போது மோச்சா என பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, அது படிப்படியாக மேலும் தீவிரமடைந்து மே 11ஆம் தேதி காலை அதிதிவிர புயலாகவும், அதே மாலையில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக் கடலில் மிகக் கடுமையான புயலாகவும் மாறும்.

அதன்பிறகு, அது படிப்படியாக மீண்டு வடகிழக்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரைகளை காக்ஸ் பஜார் (வங்காளதேசம்) மற்றும் கியாக்பியு (மியான்மர்) ஆகியவற்றுக்கு இடையே 14 முன்மதியம் கடக்க வாய்ப்புள்ளது.

top videos
    First published:

    Tags: Bay of Bengal, Cyclone