முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல்... ஆவினுக்கு பாதிப்பு - அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதல்... ஆவினுக்கு பாதிப்பு - அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாட்டில் ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் நிறுவனம் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத்தை சேர்ந்த அமுல் நிறுவனம் இதுநாள் வரை தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது தமிழ்நாட்டில் பால் உற்பத்தி செய்யப்படும் பகுதிகளில் அந்நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால் எழும் பிரச்னைகளை சுட்டிக்காட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் தரமான பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோருக்கு மிகக் குறைந்த விலையில் வழங்குவது உறுதி செய்யப்படுவதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதிலும், நுகர்வோரின் ஊட்டச்சத்தை பூர்த்தி செய்வதிலும் ஆவின் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

இந்நிலையில், அமுல் நிறுவனம் தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது குறித்தும் கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சுற்றி உள்ள பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமுல் நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகை எல்லை தாண்டிய கொள்முதல் வெண்மை புரட்சி என்ற கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நாட்டில் பால் பற்றாக்குறை உள்ள சூழ்நிலையில் நுகர்வோருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிக்க : மதிமுகவின் முதன்மைச் செயலாளர் ஆகிறார் துரை வைகோ...?

மேலும், பல ஆண்டுகளாக கூட்டுறவு மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் பால் மற்றும் பால் பொருட்களை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களிடையே ஆரோக்கியமற்ற போட்டியை உருவாக்கி விடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.

top videos

    எனவே, இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக தலையிட்டு ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்திப் பகுதிகளில் அமுல் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    First published:

    Tags: Aavin, Amit Shah, Amul, CM MK Stalin