சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை ஓஎம்ஆர் - ஈசிஆர் சாலையை இணைக்கும் கலைஞர் கருணாநிதி பிரதான சாலையில் 42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்று புள்ளி 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த பணிகளை தலைமை செயலாளர் இறையன்பு நேரில் பார்வையிட்டார்.
மழைநீர் வடிகால்வாய் பணிகள் குறித்து வரைப்படம் மூலம் தலைமை செயலாளர் இறையன்புவிற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அதன்பின் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தபடும் ஜல்லி உள்ளிட்டவற்றின் தரத்தை ஆய்வு செய்தார். அப்போது, பருவமழை காலத்தில் மக்கள் பாதிக்காத வகையில், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Iraianbu IAS