அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்துவது சட்ட விரோதமானது என்று ஓ. பன்னீர் செல்வம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு புகார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்களுக்கு ஓ. பன்னீர் செல்வம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிமுக லெட்டர் ஹெட்டில் சட்ட விரோத அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்கள். இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்களின்படி கட்சிக்கு ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளர்கள் மட்டுமே தலைமை பொறுப்பில் உள்ளவர்கள். நிர்வாகத்திற்கு இவர்கள் இருவரும்தான் முழு பொறுப்பு. அந்த வகையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான என்னுடைய சம்மதமின்றி பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு நடத்தப்பட்டுள்ளது. எனவே அதிமுகவின் பொதுச் செயலாளர் தேர்தலுக்கான அறிவிப்பு சட்டத்திற்கு விரோதமானது.
எம்.ஜி.ஆர் முதல் சசிகலா வரை... அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியில் நீடித்தவர்கள் யார் யார்?
எனவே, இந்த விபரங்களை கவனத்தில் கொண்டு அதிமுக பொது செயலாளர் தேர்தல் குறித்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.