அதிமுக ஆட்சியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை உரிய காலத்தில் வழங்காததால் அரசுக்கு 68 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2017-18ம் ஆண்டு போட்டி தேர்வுக்கு தயாராகும் 12-ம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்க அரசின் உத்தரவின் பேரில் ELCOT நிறுவனம் சார்பில், 60 ஆயிரம் மடிக்கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில், 8 ஆயிரத்து 79 மடிக்கணிகள் மட்டுமே போட்டி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
இதையும் படிங்க; ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு சிபிஐ சம்மன்...
55 ஆயிரம் மடிக்கணினிகளை தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த மடிக்கணினிகளின் பேட்டரிகள் உத்தரவாதம் காலாவதி ஆகிவிட்டதாகவும், இதனால், 68 கோடியே 71 லட்சம் ரூபாய் தேவையற்ற செலவு ஏற்பட்டுள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று கடந்த 2016-ம் ஆண்டு பின்தங்கிய நிலையில் உள்ள பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு எக்செல்ஸ் திட்டமும் குறைந்த பலன் கொடுத்து தோல்வியுற்றதாக தணிக்கை துறை தலைவரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.