அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிடக்கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவுக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்பட்டு, மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்படி, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த அனைத்து கோப்புகளையும் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அதிமுக தரப்பு அனுப்பி வைத்துள்ளது.மேலும், கர்நாடக தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. வழக்குகள் காரணமாக அதிமுகவில் கட்சி ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காததால் வேட்பாளர்களை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அதிமுகவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி பிரதீப் எம். சிங் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, Edappadi palanisamy, Tamil News