முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சட்டத்துறைக்கு அனுப்பப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா- திரும்பப் பெறுமா தமிழக அரசு

சட்டத்துறைக்கு அனுப்பப்பட்ட 12 மணி நேர வேலை மசோதா- திரும்பப் பெறுமா தமிழக அரசு

தொழிலாளர்கள்

தொழிலாளர்கள்

12 மணி நேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தனியார் நிறுவனங்களில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தி, தொழிலாளர் சட்ட விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவந்தது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை செய்யலாம். வாரத்திற்கு 3 நாட்கள் விடுமுறை என்ற மசோதா கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் கணேசன் தாக்கல் செய்தார்.

காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தி.மு.க கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. தி.மு.க அரசின் முடிவுகளுக்கு கூட்டணி கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், இந்த விவகாரத்துக்கு முதன்முறையாக கூட்டணி கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். நாம் தமிழர் கட்சியும் 12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

இந்த மசோதாவுக்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்யுள்ளன. பல்வேறு இடங்களில் தொழிற்சங்க ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மசோதாவை திரும்பப் பெறவில்லையென்றால் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று தி.மு.க கூட்டணிகட்சிகளே அறிவித்துள்ளன.

இந்தநிலையில், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர்களின் பணி நேரம் 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது தொடர்பான சட்ட மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் சட்டப்பேரவை செயலகத்திலிருந்து சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மசோதாக்களில் திரும்ப பெறும் மசோதாக்கள் குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம். சட்டப்பேரவை நிறைவேற்றப்பட்ட மசோதாகளை ஆளுநருக்கு அனுப்பும் முன்தாக சட்ட மசோதாக்களை திரும்ப பெற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதற்கான சட்டவிதிகள் உள்ளன.

அதிக நேரம் வேலை பார்த்தால் மனித சக்தி அதிகரிக்கும்- 12 மணி நேர வேலைச் சட்டத்துக்கு தமிழிசை ஆதரவு

top videos

    இதன் காரணமாக தொழிலாளர் நலத்துறை சார்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதா மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க உள்ளது என்பது விரைவில் தெரிய வரும். இன்று மாலை மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு தொழிற்சங்கங்களுடன் பிரதிநிதிகள் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. அதற்குப் பிறகு 12 மணி நேரம் மசோதாவை திரும்பப் பெற உள்ளதா? அல்லது ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளதா என்பது தெரிய வரும்.

    First published:

    Tags: Tamil Nadu