அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளியாகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, சரத்குமார், பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.