தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் (Local Body Election) ஊரகம் (Rural), நகர்ப்புறம் (Urban) என இரண்டு பிரிவாக பிரித்து நடத்தப்படுகிறது. அதன்படி, ஊரக உள்ளாட்சித்தேர்தல் ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், தற்போது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதில், நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி ஆகிய பகுதிகளுக்கான கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அடுத்து மறைமுக வாக்குப்பதிவு மூலம் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.