விராட் கோலி, கவுதம் கம்பீர் இருவரும் நேற்று ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் வார்த்தைப்போரில் ஈடுபட்டனர். இதன்காரணமாக சிறிது நேரம் விளையாட்டு மைதானம் போர்க்களமானது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு ஐபிஎல் நிர்வாகம் 100 விழுக்காடு அபராதம் விதித்துள்ளது.
ஆங்கிரி பேட் மோடில் விராட் கோலி இருந்ததற்கு இதற்கு முன்பு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த சம்பவமே காரணம் என கூறப்படுகிறது.கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி பெங்களூருவுக்கும் லக்னோ அணிக்கும் நடந்த போட்டியில் கடைசி பந்தில் லக்னோ அணி த்ரில் வெற்றிபெற்றது. அப்போது பெங்களூரு ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி கம்பீர் சைகை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணியை பெங்களூரு வீழ்த்தியது. இந்த போட்டியின் இறுதியில் வீரர்கள் கைகுலுக்கி விடைபெற்று செல்லும்போது விராட் கோலிக்கும்-லக்னோ அணி ஆலோசகர் கம்பீருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீருக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டியின் ஊதியத்திலிருந்து 100 விழுக்காடு அபராதம் விதித்தது.
இது ஐபிஎல் விதிகளை மீறிய செயல் என்று குறிப்பிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், இருவருக்கும் அபராதம் விதித்தது. இதேபோல் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நவீன் உல்ஹக்குக்கு 50 விழுக்காடு போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் ‘ஸ்டோரி’ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ‘நாம் கேட்பது அனைத்தும் உண்மை அல்ல. அது மற்றவர்களின் கருத்து. நாம் பார்க்கும் அனைத்தும் உண்மையல்ல. அது அவரவரின் பார்வை’ என எழுதியுள்ளார்.
விராட் கோலி - கவுதம் கம்பீரின் சண்டையை அடுத்து விராட் கோலியின் இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Instagram, Virat, Virat Kohli