முகப்பு /செய்தி /விளையாட்டு / ‘உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்’ – தோனி குறித்து உருக்கமான பதிவிட்ட ஜெயக்குமார்

‘உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்’ – தோனி குறித்து உருக்கமான பதிவிட்ட ஜெயக்குமார்

தோனி - ஜெயக்குமார்

தோனி - ஜெயக்குமார்

தோனி என்ற ஒற்றைபெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. - ஜெயக்குமார்

  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவு கவனம் பெற்று வருகிறது. தோனியின் ஓய்வு குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் தோனியின் ஓய்வறிந்து அவர் குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும் என முன்னாள் ஜெயக்குமார் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கத்தில் ஐதராபாத் - சென்னை அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 134 ரன்கள் எடுத்தது.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். அணியின் ஸ்கோர் 87 ஆக இருந்தபோது 35 ரன்கள் எடுத்திருந்த ருதுராஜ் கெய்க்வாட் ரன் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த அஜிங்யா ரஹானே மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தலா 9 ரன்னில் ஆட்டமிழந்தனர். விக்கெட்டுகள் ஒரு பக்கம் விழுந்தாலும் தொடக்க வீரர் டெவோன் கான்வே சிறப்பாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். 18.4 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.இதன் மூலம் சென்னை அணி இந்த தொடரில் 4வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது.

போட்டி முடிந்த பின்னர் பேசிய சென்னை அணி கேப்டன் தோனி, என் கிரிக்கெட் வாழ்வில் கடைசி கட்டம் இது. அதை மகிழ்ச்சியாக கடப்பது முக்கியமானது. சென்னைக்கு வருவது மிகவும் மகிழ்ச்சி. ரசிகர்கள் மிகுந்த அன்பு வைத்துள்ளனர். என் பேச்சை கேட்க சென்னை ரசிகர்கள் கடைசி வரை இருக்கின்றனர்" என்றார். தோனியின் இந்த பேச்சு அவர் இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுகிறார் என தெரிகிறது என ரசிகர்கள் சமூக வலைதளங்களில்  சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பதிவில், ‘சச்சின் அவுட் ஆனபிறகு டிவியை ஆப் செய்த ஒட்டுமொத்த இந்தியாவையும் இறுதிவரை மேட்ச் பார்க்க செய்த இளைஞன்(இன்றும்). தோனி என்ற ஒற்றைபெயரே இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறது. உன் ஓய்வறிந்து நீ குவித்த கோப்பைகளும் கண்ணீர் வடிக்கும்!’ என்று கூறியுள்ளார். அவரது இந்த பதிவு கவனம் பெற்று வருகிறது.

top videos
    First published:

    Tags: IPL, IPL 2023