முகப்பு /செய்தி /விளையாட்டு / 3 வீரர்கள் அரைச் சதம்… ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 203 ரன்கள் குவிப்பு

3 வீரர்கள் அரைச் சதம்… ஐதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 203 ரன்கள் குவிப்பு

ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பட்லர் - ஜெய்ஸ்வால் இணை.

ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த பட்லர் - ஜெய்ஸ்வால் இணை.

ஒரு கட்டத்தில் 230 ரன்களை ராஜஸ்தான் அணி எளிதாக கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கெண்டு வந்தனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில பேட்டிங் செய்துள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 203 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அரைச் சதம் அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினர். இதையடுத்து ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார்.

இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக யஷாஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். 5.5 ஓவரில் அணி 85 ரன்கள் எடுத்திருந்தபோது 54 ரன்களுடன் ஜோஸ் பட்லர் ஆட்டமிழந்தார். அடுத்து இணைந்த கேப்டன்  சஞ்சு சாம்சனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 37 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் ஜெய்ஸ்வாலும், 32 பந்துகளில் 55 ரன்கள் குவித்து கேப்டன் சாம்சனும் ஆட்டமிழந்தனர். 14.1 ஓவரில் அணி 151 ரன்கள் எடுததிருந்தபோது 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் ரன்குவிப்பு படிப்படியாக குறைந்தது.

top videos

    ஒரு கட்டத்தில் 230 ரன்களை ராஜஸ்தான் அணி எளிதாக கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி ஆட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் கெண்டு வந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 203 ரன்கள் எடுத்தது. ஹெட்மேயர் 22 ரன்னுடனும், அஷ்வின் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023