முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு…

IPL 2023 : ஆர்.சி.பி.க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு…

கிளென் மேக்ஸ்வெல் - ஃபாஃப் டூப்ளசிஸ்

கிளென் மேக்ஸ்வெல் - ஃபாஃப் டூப்ளசிஸ்

விராட் கோலி ஒருநாள் போட்டியைப் போன்று ரன்கள் சேர்க்க டூப்ளசிஸ் சற்று வேகம் காட்டினார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டூப்ளசிஸ் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

விராட் கோலி ஒருநாள் போட்டியைப் போன்று ரன்கள் சேர்க்க டூப்ளசிஸ் சற்று வேகம் காட்டினார். 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவைரத் தொடர்ந்து 44 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து டூப்ளசிஸ் அவுட் ஆனார். அதிரடியாக ரன்களை சேர்த்த கிளென் மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 5 பவுண்டரியுடன் 54 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து வந்தவர்கள் மஹிபால் லோம்ரோர் 1 ரன்னும், தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமலும், மைக்கேல் பிரேஸ்வெல் 9 ரன்னும் எடுத்து வெளியேறினர். கடைசி  ஓவர்களில் அனுஜ் ராவத் 11 பந்துகளில் 2 சிக்சர் மற்றும் 3 பவுண்டரியுடன் 29 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி 171 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023