ஐபிஎல் குவாலிபையர் 2 போட்டியில் மும்பைக்கு எதிரான மேட்ச்சில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக ரன்கள் குவித்தவர்களுக்கான ஆரஞ்ச் தொப்பியையும் வென்று கில் சாதனை படைத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான குவாலிபையர் 2 போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து குஜராத் அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிறன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் மோதும்.
குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக ரிதிமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர். 16 பந்துகளை எதிர்கொண்ட சாஹா 3 பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து களத்திற்கு வந்த சாய் சதர்சனுடன் இணைந்து சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார்.
ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரிகள் பறக்க அணியின் ஸ்கோர் விறுவிறுவென உயர்ந்தது. 49 பந்துகளை எதிர்கொண்ட அவர் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ரன்கள் சேர்த்த கில் 60 பந்துகளில் 10 சிக்சர் மற்றும் 7 பவுண்டரியுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆகாஷ் மத்வால் வீசிய பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் கில் அடிக்க அந்த பந்து டிம் டேவிட்டின் கைக்குள் விழுந்தது. இதேபோன்று, ஐபிஎல் தொடரில் 800 ரன்களை கடந்துள்ள சுப்மன் கில் அதிக ரன்களை குவித்தவருக்கான ஆரஞ்ச் தொப்பியையும் வென்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.