முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை இந்தியன்ஸை திணறடித்த சி.எஸ்.கே. பவுலிங்… சென்னை அணி வெற்றி பெற 140 ரன்கள் இலக்கு

IPL 2023 : மும்பை இந்தியன்ஸை திணறடித்த சி.எஸ்.கே. பவுலிங்… சென்னை அணி வெற்றி பெற 140 ரன்கள் இலக்கு

சென்னை அணி

சென்னை அணி

மும்பை அணியின் இன்னிங்ஸில் ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போட்டியில் சி.எஸ்.கே. பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங்  செய்துள்ள மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கேமரூன் கிரீன் மற்றும் இஷான் கிஷன் களத்தில் இறங்கினர்.4 பந்தில் 6 ரன்களுடன் கிரீனும், 9 பந்தில் 7 ரன்களுடன் இஷான் கிஷனும் நடையைக் கட்டினர். அடுத்து வந்த கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 14 ரன்களில் 3 விக்கெட்டுகளை மும்பை அணி இழந்திருந்தபோது நெஹல் வதேரா – சூர்யகுமார் இணை அணியை மீட்டெடுத்தது. இருவரும் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 51 பந்தில் வதேரா 64 ரன்களும், சூர்யகுமார் 26 ரன்களும் அடுத்து வந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 20 ரன்களும் எடுத்தனர்.

top videos

    20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த  மும்பை அணியால் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. குறிப்பாக மற்ற அணிகளுடன் சிக்சரும் ஃபோருமாக விளாசிய மும்பை வீரர்களால் சென்னை அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியவில்லை. மும்பை இன்னிங்ஸில் ஒரேயொரு சிக்சர் மட்டுமே அடிக்கப்பட்டது.  மதீஷா பதிரனா  4 ஓவக்ள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். தீபக் சஹார் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இதையடுத்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

    First published:

    Tags: IPL, IPL 2023