முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : மும்பை அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி…

IPL 2023 : மும்பை அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி…

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்த நிலையில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி மும்பை அணியின் ரசிகர்களை டென்ஷனாக்கினர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற 213 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களத்தில் இறங்கினர்.

பட்லர் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 10 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேற தேவ்தத் படிக்கல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார்.  ஜேசன் ஹோல்டர் 11 ரன்களும், ஷிம்ரோன் ஹெட்மேயர் 8 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க தவறியதால் அணியின் ரன் குவிப்பு வேகம் கட்டுப்படுத்தப்பட்டது.

விக்கெட்டுகள் ஒருபக்கம் விழுந்த நிலையில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சிக்சரும் பவுண்டரியுமாக விளாசி மும்பை அணியின் ரசிகர்களை டென்ஷனாக்கினர். 62 பந்துகளை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் 8 சிக்சர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 124 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 212 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

First published:

Tags: IPL, IPL 2023