முகப்பு /செய்தி /விளையாட்டு / IPL 2023 : பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு

IPL 2023 : பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு

பஞ்சாப் அணி வீரர்கள்

பஞ்சாப் அணி வீரர்கள்

கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன்னில் அவுட் ஆனார்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற 180 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் களத்தில் இறங்கினர். 12 ரன்னில் பிரப்சிம்ரன் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளிக்க அடுத்து வந்த பனுகா ராஜபக்சே ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய லியாம் லிவிங்ஸ்டோன் 15 ரன்னில் அவுட் ஆனார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் கேப்டன் ஷிகர் தவான் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். 47 பந்துகளை எதிர்கொண்ட தவான் 57 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

ஜிதேஷ் சர்மா 21, சாம் கரன் 4, ரிஷி தவான் 19, ஷாரூக்கான் 21, ஹர்ப்ரீத் 17 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப் அணி 179 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கொல்கததா அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

First published:

Tags: IPL, IPL 2023