சென்னை- லக்னோ ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன் மைதானத்தில் நாய் புகுந்ததால் போட்டி தொடங்க சற்று தாமதமானது.
16வது ஐபிஎல் தொடரின் 6வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங்கை முதலில் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களமிறங்கினர். அப்போழுது போட்டி தொடங்குவதற்கு முன் நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்ததால் போட்டி தொடங்க சற்று தாமதமானது.
பீல்டர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் களத்திற்கு வந்த பிறகு நாய் புகுந்ததால் அதனை பிடிக்க மைதான ஊழியர்கள் படாத பாடுபட்டனர். இதனையடுத்து நாயை பிடித்த ஊழியர்கள் அதனை பத்திரமாக மீட்டு சென்ற பிறகு போட்டி தொடங்கியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.