சபரிமலை பொன்னம்பல மேட்டில் அனுமதியின்றி பூஜை செய்த வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னையை சேர்ந்த நாராயணசாமி கேரளாவின் பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
ஆன்மீக தலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி வந்து ஐயப்பனை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘மகரஜோதி’ அன்று பக்தர்களுக்கு பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சியளிப்பார்.
அப்படி மகரவிளக்கு ஏற்றப்படும் பொன்னம்பலமேடு பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. வனத்துறையினர் அனுமதியின்றி யாரும் இப்பகுதிக்குள் நுழைய முடியாது. இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த நாராயணசாமி உட்பட 5 பேர் அங்கு பூஜை நடத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க கோரி சென்னையைச் சேர்ந்த நாராயணசாமி பத்தினம்திட்டா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, நாராயணசாமிக்கு முன்ஜாமின் வழங்கக் கூடாது என கேரள வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bail, Kerala, Sabarimalai