சனி - செவ்வாய் இணைவால் ஏற்படும் நவபஞ்சம ராஜயோகம்; அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசிகள்!
நவபஞ்சம ராஜயோகம் : இந்த 3 ராசிக்காரர்களின் தலையெழுத்து மாறப்போகுது..!
Navapancham Rajayogam : சனி மற்றும் செவ்வாய் இணைவால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கோடி பலன்களை பெறப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.
வேத ஜோதிடத்தின்படி, பல வகையான ராஜயோகங்களில் 'நவபஞ்சம ராஜயோகமும்' ஒன்றாகும். உண்மையில் 2 கிரகங்கள் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருக்கும்போது, இந்த ராஜயோகம் உருவாகிறது. இதனால் சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இந்நிலையில், செவ்வாய் மிதுன ராசியில் நுழையும் அதே வேளையில், கும்ப ராசியில் சனி உதயமாகிறார். சனி இருக்கும் ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் வீட்டில் செவ்வாயும், செவ்வாய் இருக்கும் இடத்தில் இருந்து ஒன்பதாம் வீட்டில் சனியும் உள்ளது. இந்த நிலையில் தான் நவபஞ்சம ராஜயோகம் உருவாகிறது. இதனால், சில ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். அந்த ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்க்கலாம்.
மேஷம் : இந்த ராசிக்கு மூன்றாம் இடத்தில் செவ்வாயும், பதினொன்றாம் வீட்டில் சனியும் சஞ்சரிக்கிறார்கள். இரண்டு கிரகங்களும் தங்கள் சொந்த பலன் வீடுகளில் அமர்ந்திருந்தால், நவபஞ்சம ராஜயோகம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ராஜ யோகத்தின் தாக்கத்தால் தைரியம் அதிகரிப்பு, சகோதரர்களால் ஆதாயம், வியாபாரத்தில் ஆதாயம் போன்ற விஷயங்கள் தெரியும். இந்த நேரத்தில் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழில்நுட்பத் துறையுடன் தொடர்புடையவர்கள் இந்த நேரத்தில் புகழுக்கான வாய்ப்புகளைப் பார்க்கிறார்கள்.
கன்னி : இந்த ராசிக்கு ஆறாம் வீட்டில் சனியும், பத்தாம் வீட்டில் செவ்வாயும் உள்ளது. ஆறாம் வீட்டில் சனியும், பத்தாம் வீட்டில் செவ்வாயும் பலம் பெறுகிறார். இந்த ராஜயோகத்தின் செல்வாக்கின் கீழ், நீங்கள் பணியிடத்தில் பதவி உயர்வு பெறலாம், சில பெரிய பொறுப்புகளும் உங்களுக்கு வழங்கப்படலாம். உங்களுக்கு, செவ்வாய் மற்றும் சனியின் ராஜயோகம் உங்கள் எதிரிகள் அனைவரையும் அழிக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எங்கிருந்தும் சிறந்த வேலை வாய்ப்பைப் பெறலாம். நீண்ட நாட்களாக சொத்து வாங்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தால், அந்தக் கனவு இப்போது நனவாகும்.
கும்பம் : இந்த ராசிக்கு சனி லக்னத்திலும், செவ்வாய் ஐந்தாம் வீட்டில் அமர்கிறார். இந்த ராஜயோகத்தின் தாக்கத்தால் சமூகத்தில் உங்கள் கௌரவம் உயரும். இந்த நேரத்தில் உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறலாம். நீங்கள் இயந்திர வேலைகளுடன் தொடர்புடையவராக இருந்தால், இந்த நேரத்தில் சனி உங்களுக்கு நன்மைகளைத் தருவார். செவ்வாயின் தாக்கத்தால் சகோதர சகோதரிகளின் உதவி இந்த நேரத்தில் கிடைக்கும். செவ்வாய் மற்றும் சனியின் இந்த நவ பஞ்சம ராஜயோகம் உங்கள் வாழ்வில் செல்வத்தை அதிகரிக்கும். உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.