முகப்பு /செய்தி /ஆன்மிகம் / சைத்ரா நவராத்திரி 2023: விரத முறைகளும் துர்கா பூஜை குறித்த தகவல்களும்

சைத்ரா நவராத்திரி 2023: விரத முறைகளும் துர்கா பூஜை குறித்த தகவல்களும்

துர்க்கை தேவி

துர்க்கை தேவி

Chaitra Navratri 2023 | சைத்ரா நவராத்திரியின் போது துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள் வழிபடப்படுகின்றன, ஒவ்வொரு நாளும் ஒரு அவதாரத்திற்கு துர்க்கை அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. பக்தர்களும் விரதம் இருந்து துர்க்கையை வழிபடுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

'நவராத்திரி’ இந்தியாவில் 9 இரவுகள் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான விழா. இந்தியாவில் மக்கள் 4 வகையான நவராத்திரி பண்டிகையை கொண்டாடுகின்றனர். வராஹி நவராத்திரி, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாட்கள் சாரதா நவராத்திரி அல்லது சாரதியா நவராத்திரி, தை மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி சியாமளா நவராத்திரி, பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் பிரதமை முதல் ஒன்பது நாட்கள் வசந்த நவராத்திரி அல்லது சைத்ரா நவராத்திரி கொண்டாடப்படுகிறது.

இதில் வட இந்தியர்களால் சைத்ரா நவராத்திரி மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பருவ மழைக்குப் பிறகு, துர்க்கையை வழிபடும் விதமாக இந்த நவராத்திரி விழா அனுசரிக்கப்படுகிறது.

சைத்ரா நவராத்திரி வரலாறு:

இந்து புனித நூல்களின்படி, துர்கா தேவியை சிவபெருமான் தனது பெற்றோரின் வீட்டிற்கு 9 நாட்கள் சென்று தங்க அனுமதித்தார். இந்த 9 நாட்களில் துர்கா மகிஷாசுரன் என்ற அரக்கனைக் கொன்றதாக நம்பப்படுகிறது, இது தீமையின் மீது நன்மையின் வெற்றியை குறிக்கிறது. துர்க்கையை வழிபடுவது பலத்தை அளிப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்று முதல் நவராத்திரி விழா கோலாகலமாகவும், உற்சாகமாகவும் கொண்டாட தொடங்கியது.

சைத்ரா நவராத்திரி எப்போது?

இந்த ஆண்டு திருவிழா மார்ச் 22-ம் தேதி தொடங்கி மார்ச் 30-ம் தேதி முடிவடையும் என்று த்ரிக் பஞ்சாங்கம் தெரிவித்துள்ளது. கட்டஸ்தாபன பூஜை விதி ஒன்பது நாள் கொண்டாட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் வழிபடப்படும் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

துர்க்கையின் 9 அவதாரங்கள்

நாள் 1: மார்ச் 22 - பிரதிபதா - மா ஷைல்புத்ரி பூஜை

நாள் 2: மார்ச் 23 - த்விதியா - மா பிரம்மச்சாரிணி பூஜை

நாள் 3: மார்ச் 24 - திரிதியை - மா சந்திரகாண்டா பூஜை

நாள் 4: மார்ச் 25 - சதுர்த்தி - மா கூஷ்மாண்ட பூஜை

நாள் 5: மார்ச் 26 - பஞ்சமி - மா ஸ்கந்தமாதா பூஜை

நாள் 6: மார்ச் 27 - சஷ்டி - மா காத்யாயனி பூஜை

நாள் 7: மார்ச் 28 - சப்தமி - மா காலராத்திரி பூஜை

நாள் 8: மார்ச் 29- அஷ்டமி- மா மஹாகௌரி பூஜை

நாள் 9: மார்ச் 30 - ராம நவமி - மா சித்திதாத்ரி பூஜை

கட்டஸ்தாபனா முகூர்த்தம் என்றால் என்ன?

ஆளும் பிரதிபாதத்தின் மூன்றாம் நாளில் கட்டஸ்தாபன சடங்குகளை மேற்கொள்வது மிகவும் சாதகமானதாக கருதப்படுகிறது. சில காரணங்களால், இந்த காலகட்டத்தை கடைபிடிக்க முடியவில்லை என்றால், அபிஜித் முஹுரத்தில் பூஜை செய்யலாம். உங்கள் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை சக்திகளை அகற்ற, துர்கா சப்தசதி பூஜையின் பலன்களை பெறலாம்.

இந்த சைத்ரா நவராத்திரி பூஜைக்கான விதிமுறைகள் முகூர்த்த நேரத்தில் செய்யப்பட வேண்டும். ஏனெனில் இது சக்தி தேவியை அழைக்கும் நோக்கம் கொண்டது. எனவே, சக்தி தேவியின் கோபத்தைத் தவிர்ப்பதற்காக அமாவாசையின் போது அல்லது இரவில் அதை நடத்தக்கூடாது என்பது ஐதீகம்.

அபிஜித் முகூர்த்தம் என்பது நாளின் நடுப்பகுதியில் ஒரு நல்ல நேரம் மற்றும் இது சுமார் 51 நிமிடங்கள் நீடிக்கும். இது பல தோஷங்களை விரட்டுவதற்கான ஒரு சக்திவாய்ந்த நேரமாக செயல்படுகிறது மற்றும் வாழ்க்கையில் நல்ல செயல்களைத் தொடங்குவதற்கு மிகவும் பயனுள்ள முகூர்த்தம் என்று நம்பப்படுகிறது. சித்ரா நட்சத்திரம் மற்றும் வைத்ரிதி யோகம் சாதகமான அம்சமாக இருந்தாலும், அவை கட்டஸ்தாபன விதியை நடத்துவதற்கு சாதகமற்றதாகக் காணப்படுகின்றன. இது தவிர, ஆளும் பிரதிபாதா நேரத்தில் இந்த சடங்கு நடத்துவதற்கு பிற்பகல் நேரம் மிகவும் உகந்தது ஆகும்.

சைத்ரா நவராத்திரி பூஜை விதிமுறைகள்:

சுத்தமான மண், வாய் அகலமான மண் பானை, ஏழு வெவ்வேறு தானியங்கள், சிறிய பித்தளை கலசம், புனித நூல், வாசனை திரவியம், நாணயங்கள், வெற்றிலைகள், மா இலைகள், உரிக்கப்படாத தேங்காய், சிவப்பு நிற துணி, துர்வா புல், சாமந்தி பூக்கள் ஆகிய பூஜை பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும். துர்கா பூஜைக்கு முன்னதாக, மண் பானையின் அடிப்பகுதியில் ஒரு மண்ணை சேர்த்து கலசத்தை தயார் செய்யவும். தானியங்களை மண்ணின் அடியில் வைக்கவும். பானை மண்ணின் அடுக்குகளால் உச்ச நிலைக்கு நிரப்பப்படும் வரை இதனை தொடரவும்.

Also see...  வடமாநிலங்களில் தொடங்கியது சைத்ர நவராத்திரி விழா.. பக்தர்கள் வழிபாடு

கலசம் அல்லது பித்தளை பாத்திரத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து வாசனை திரவியம், வெற்றிலை பாக்கு, துர்வா புல், அக்சதை மற்றும் சில காசுகளை இந்த பாத்திரத்தில் வைக்கவும். பித்தளை பாத்திரத்தின் திறப்பில் 5 முதல் 6 மா இலைகளை வைத்து மூடி வைக்கவும். உரிக்கப்படாத தேங்காயைக் கொண்ட சிவப்புத் துணியில் புனித நூலைக் கட்டவும். பின்னர் இதை கலசத்தின் மேல் வைக்கவும்.

top videos

    இறுதியில், இந்த பித்தளை பாத்திரத்தை மண் பானையின் மேல் வைக்கவும். இப்போது பூஜை அமைப்பு முடிந்து. அதில் துர்கா தேவியை ஆவாஹனம் செய்து, 9 நாட்கள் கலசத்தில் தங்கி அருள்பாலிக்குமாறு தேவியை வழிபடலாம்.

    First published:

    Tags: Durga Puja