சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள கோவிந்தபாளையம், பள்ளிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜீ. அதே ஊரில் அவரது சித்தப்பா பூசமுத்து என்பவர் (வயது 63) வசித்து வருகிறார். இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ம் தேதி ராஜீயின் மனைவி முத்தம்மாளுக்கும் பூசமுத்துவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பூசமுத்து முத்தம்மாளை தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த முத்தம்மாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் மனைவி முத்தம்மாளை தாக்கியதால் ஆத்திரமடைந்த ராஜி, சித்தப்பா பூசமுத்துவை தட்டிக்கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக கடந்த 7ம் தேதி அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கைகலப்பாகி இருவரும் தாக்கிக்கொண்டனர். ராஜீ தாக்கியதில் பூசமுத்துவுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் விலகி விட்டுள்ளனர். மேலும் வலியால் துடித்த பூசமுத்துவை சிகிச்சை சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தலைவாசல் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவான ராஜீயை கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Local News, Salem, Tamil News