முகப்பு /செய்தி /சேலம் / டிவி பார்ப்பதில் தகராறு : கிணற்றில் குதித்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி பலி

டிவி பார்ப்பதில் தகராறு : கிணற்றில் குதித்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி பலி

கிணற்றில்  மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு

கிணற்றில்  மூழ்கி தந்தை, மகள் உயிரிழப்பு

ஆத்தூர் அருகே பைத்தூர் பகுதியில் கிணற்றில் குதித்த மகளை காப்பாற்ற தந்தையும் கிணற்றில் குதித்த நிலையில் தந்தை மகள் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Last Updated :
  • Salem, India

சேலத்தில் டிவி பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையும், மகளும் கிணற்றிற்குள் குதித்து உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த பைத்தூர் 2 வது வார்டு பகுதியை சேர்ந்தவர் கணேசன். எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் கணேசனுக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். சத்தியா என்ற முதல் மனைவிக்கு பிரவீனா மற்றும் மேகலா என்கிற இரண்டு மகள்கள் உள்ளனர்.

கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் மனைவி சத்யா இறந்து விட்ட நிலையில், கணேசன் அதே பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் என்கிற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். வெள்ளையம்மாளுக்கு பிரியன் என்கிற ஆறு வயது மகன் இருக்கிறார். முதல் மனைவியின் மகளான மேகலா 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு விடுமுறை நாட்களில் வீட்டில் இருந்துள்ளார்.

புதன் இரவு 7 மணி அளவில் மேகலாவிற்கும் அவருடைய தம்பி பிரியனுக்கும் டிவி பார்ப்பதில் சண்டை ஏற்பட்டுள்ளது. மேகலா படம் பார்க்க வேண்டும் என்று கூற, அவருடைய தம்பி பிரியன் சுட்டி டிவி தான் பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.

இருவருக்கும் சண்டை அதிகமாகவே அப்போது வீட்டுற்கு வந்த தந்தை கணேசன், இருவரையும் திட்டி விட்டு கோபத்தில் டிவியின் ரிமோட்டை உடைத்துள்ளார். இதனால் மேகலா தந்தையிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் படிக்க... சுழற்றியடிக்கும் புயலில் தாய்க்கு உதவிய சிறுவன்... நெகிழ்ச்சி வீடியோ வைரல்..

வாக்குவாதம் அதிகமாகவே கோபம் அடைந்த மேகலா வீட்டின் அருகில் உள்ள தங்களது விவசாயத் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள கிணற்றில் குதித்து விட்டார். இதைப்பார்த்த கணேசன், மகளை காப்பாற்ற முயன்று அவரும் கிணற்றிற்குள் குதித்து விட்டார்.

இருவரும் கிணற்றிற்குள் குதித்ததை பார்த்த கணேசனின் மனைவி கூச்சலிட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து இருவரையும் காப்பாற்ற முயன்றுள்ளனர்.

கிணற்றில் வெகு நேரம் தேடியும் இருவரையும் காப்பாற்ற முடியாததால் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடும்போது மேகலா இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

ஏழு மணி நேர தேடுதலுக்கு பிறகு கணேசனும் சடலமாக மீட்கப்பட்டார். ஆத்தூர் ஊரக போலீசார் தந்தை, மகள் இருவரது சடலத்தையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

top videos

    டிவி பார்ப்பதில் ஏற்பட்ட சண்டையால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    First published:

    Tags: Crime News, Salem, Tv