முகப்பு /செய்தி /சேலம் / 5 லட்சம் வண்ண மலர்கள்... கண்கவர் கலை நிகழ்ச்சிகள் - ஏற்காட்டில் தொடங்குகிறது 8 நாட்கள் மலர்கண்காட்சி..!

5 லட்சம் வண்ண மலர்கள்... கண்கவர் கலை நிகழ்ச்சிகள் - ஏற்காட்டில் தொடங்குகிறது 8 நாட்கள் மலர்கண்காட்சி..!

ஏற்காடு மலர் கண்காட்சி

ஏற்காடு மலர் கண்காட்சி

Yercaud Flower Show 2023 : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி 21.05.2023 முதல் 28.05.2023 வரை 8 நாட்கள் நடைபெறவுள்ளது.

  • Last Updated :
  • Salem, India

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு 46வது கோடை விழா மற்றும் மலர்க்காட்சியை 21.05.2023. ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டு தொடங்கி வைக்க உள்ளனர்.

இக்கோடை விழாவில் குழந்தைகள், சுற்றுலாப் பயணிகள் என அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் அண்ணா பூங்காவில் பொன்னியின் செல்வன், கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், ஹனி பீம் உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் கார்னேஷன், ஜெர்பரா, ஆந்தூரியம், ஆர்க்கிட் உள்ளிட்ட 5 லட்சம் அரிய வண்ண மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்படவுள்ளது.

மேலும், பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் டாலியா, மேரி கோல்ட், ஜீனியா. டோரினியம். சால்வியா உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் வண்ண மலர்களை கொண்ட 10 ஆயிரம் மலர் தொட்டிகள் இம்மலர்க்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும், இந்த மலர்க்கண்காட்சியில் மலைப்பகுதிகளில் விளையக்கூடிய பல்வேறு பழங்களைக் கொண்டு பழக்கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சிகளும் அமைக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க : ஏசி, ஏர் கூலர் இல்லாமலே உங்கள் வீட்டை குளுர்ச்சியா வச்சுக்கனுமா..? தினமும் இரவு டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மலை ஏற்றம் (டிரக்கிங்). கைப் போட்டிகள், கயிறு இழுத்தல் போட்டிகள். மராத்தான், சைக்கிளிங், சில படகு போட்டி, கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.

மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வச திட்டத்தின் சார்பில் கொழு கொழு குழந்தைகள் போட்டி, பாரம்பரிய போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டிகள் நடத்தப்படவுள்க. மேலும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் செல்லப் பிராணிகள் (நாய்கள்) கண்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள், இந்நிசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

இவ்விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் 46வது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சியினை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப்பேருரை ஆற்றவுள்ளனர்.

top videos

    மேலும், இவ்விழாவிற்கு சேலம் மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

    First published:

    Tags: Local News, Salem