முகப்பு /செய்தி /ராணிப்பேட்டை / பாம்பை கடித்து துப்பி வீடியோ பதிவிட்ட இளைஞர்கள்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

பாம்பை கடித்து துப்பி வீடியோ பதிவிட்ட இளைஞர்கள்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி!

பாம்பை கடித்து துப்பிய இளைஞர்

பாம்பை கடித்து துப்பிய இளைஞர்

Ranipettai snake | ராணிப்பேட்டை அருகே சாலையில் சென்ற பாம்பை பிடித்து வாயால் கடித்து இரு துண்டுகளாக்கி சாலையில் வீசிய கொடூர செயல் அரங்கேறியுள்ளது.

  • Last Updated :
  • Ranipettai (Ranipet), India

ராணிப்பேட்டை அருகே தண்ணீர் பாம்பை வாயில் கடித்து துப்பி வீடியோவாக பதிவு செய்து வெளியிட்ட 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சின்னகைனூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மோகன்(33) சூர்யா(21) மற்றும் சந்தோஷ்(21). இந்த மூவரும் கடந்த மாதம் 15ம் தேதியன்று அவர்களது குடியிருப்பு பகுதிக்கு அருகே வந்த தண்ணீர் பாம்பு ஒன்றை கையில் பிடித்துள்ளனர். அதோடு நிற்காமல் பாம்பை வாயால் கடித்து இரு துண்டாக்கி அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க | ஆவின் பால் பாக்கெட் கலர் வித்தியாசம்.. இவ்வளவு விஷயம் இருக்கா? பலருக்கும் இது தெரியாது!

வீடியோ வைரலான நிலையில், சென்னை வனத்துறை அலுவலகத்திலிருந்து கிடைத்த தகவலின் பேரில், இந்த கொடூர செயலில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களையும் கைது செய்த ஆற்காடு வனச்சரகர் சரவணபாபு தலைமையிலான வனத்துறை போலீசார், அவர்கள் மீது வனவிலங்குகளை துன்புறுத்துதல், வீடியோ பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: சிவா, ராணிப்பேட்டை.

top videos
    First published:

    Tags: Local News, Ranipettai, Snake