முகப்பு /ராமநாதபுரம் /

வீடுபுகுந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு..

வீடுபுகுந்து இளைஞரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்.. ராமநாதபுரத்தில் பரபரப்பு..

X
இளைஞரை

இளைஞரை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்கள்

Ramanathapuram News : ராமநாதபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் வீட்டில் தனியாக உறங்கி கொண்டிருந்த இளைஞரை மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பிள்ளையார் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரபு தேவா. இவரது தாயார் வெளியூர் சென்றுவிட்டதால் இரவில் தனியாக வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது தாயார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பஜார் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்படி அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து உறங்கிக்கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்த சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Local News, Ramanathapuram