ராமேஸ்வரத்தில் ஏழை எளிய மக்களை பாதிக்கும், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நாடு முழுவதும் கடந்த வாரம் சிலிண்டர் விலை முன்பிருந்ததை விட ரூ.50 விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில் ஏழை, நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வினை கண்டித்து, நூதன முறையில் சிலிண்டருக்கு பூ மாலை போட்டு, விறகு அடுப்பினை பயன்படுத்தி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசின் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கக்கூடிய சமையல் எரிவாயு விளைவு வியர்வை உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்றும், கடந்து எட்டு வருடத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.800 ரூபாய்க்கு மேல் உயர்ந்திருப்பதாகவும் கூறி கோஷங்களை எழுப்பி, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram