ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அடுத்த பாரனூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி 50-க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் பாரனூரில் உள்ள இந்திரா நகர் ஆதிதிராவிடர் காலணிபகுதியில் மாற்றுத் திறனாளிகள், விதவைகள், கணவரால் கைவிட்டவர்கள், கூலி தொழிலாளி என 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் பாரனூர் ஆதிதிராவிடர் காலணியில் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு சொந்தமான 80 ஏக்கர் புறம்போக்கு இடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதன் பின் அப்பகுதி மக்கள் அந்த 80 ஏக்கர் இடத்தில் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகாலை முதல் பெய்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram