ராமேஸ்வரம் மாவட்டம் ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் தை அமாவாசை தினத்தை ஒட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பபாக, தை அமாவாசை உள்ளிட்ட முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, தீர்த்தக் கிணறுகளிலும், அன்னி தீர்த்தமான கடலிலும் நீராடி ராமநாதசுவாமியை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு இந்தியாவின் பல்வேறு பகுதி இருந்து சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தங்களது சொந்த வாகனத்திலும் வாடகை வானத்திலும் வந்து செல்வார்கள். எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு இன்று 20 தேதி மதியம் முதல் 21ஆம் தேதி இரவு முழுவதும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.
மேலும், ராமேஸ்வரம் நகரத்திற்குள் வரும் வாகனம் அனைத்தும் பேருந்து நிலையத்திலிருந்து சிவகாமி நகர், சன்னிமலை, இரட்டை பிள்ளையார் கோயில் தெரு, சௌந்தர்யா அம்மன் கோயில் தெரு, சம்பை, மாங்காடு ரோடு வழியாக நகராட்சி பார்க்கிங், ஜேஜே பார்க்கிங் மற்றும் கோயில் பார்க்கில் செல்ல வேண்டும்.
பின்னர், பார்க்கிங் பகுதியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து கோயில்காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும். பின்னர் பார்க்கிங் பகுதியில் இருந்து தனுஷ்கோடி நோக்கி செல்லும் வாகனங்கள் மேற்கு வாசல் வழியாக திட்டக்குடி வந்தடைந்து தேவர் சிலை வழியாக செல்ல வேண்டும்.
அதேபோன்று தனுஷ்கோடியில் இருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் வாகனங்கள் தேவர் சிலை, ரயில்வே பீடர்ரோடு, வண்ணார் தெரு, நகர் காவல் நிலையம், பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ராமேஸ்வரம் பேருந்து நிலையத்திலிருந்து சாலை பகுதிகளில் வாகனங்களை நிறுத்தினாலும், பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் நபர்கள் மீதும் சட்டப்படியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
Must Read : அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் டூரிசம்.. குண்டாறு அணையில் கேம்ப் ஸ்டே.. மெருகேறப்போகும் குற்றாலம்..
தை அமாவாசை பாதுகாப்பு பணிக்காக ராமேஸ்வரம் நகர் பகுதி முழுவதும் சுமார் 1000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளளனர். குற்ற செயல்களை தவிர்க்கும் விதமாக முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை கேட்டுக் கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram, Thai Amavasai