பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்வு அறையில் செல்போன் மறைத்து
வைத்திருந்த நபரிடம் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 27 மையங்களில் தேர்வு நடைபெற்றது,
பரமக்குடி சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவாத் ஆய்வு செய்தபோது சந்தேகத்தின் பெயரில் தேர்வு அறையில் ஒருவரை பரிசோதனை செய்தனர்.
இதில் நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்வு அறையில் இருந்து வெளியேற்றப்பட்டு பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் விசாரணை செய்யப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு அறைமே ற்பார்வையாளர் சங்கீதா புகாரின்பேரில் பரமக்குடி நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி தேர்வு அறையில் செல்போன் மறைத்திருந்த நபரை வெளியேற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.