ராமநாதபுரத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கத்தை கைவிட வேண்டும் மற்றும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளாக மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என்றும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என்றும், ஊராட்சி ஒன்றிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வெளியிடப்பட்ட அரசாணையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இதுபோன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Protest, Ramanathapuram, Tamil News