மதுரைக்கு அடுத்தப்படியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சித்திரை பௌர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான நிகழ்வாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பரமக்குடியில் உள்ள அருள்மிகு சுந்தர்ராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23-ம் தேதி கொடியேற்றம் மற்றும் காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இந்த சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தர்ராஜ பெருமாள் கள்ளழகர் கோலம் கொண்டு பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கினார்.
தங்க குதிரை வாகனத்தில் நீலநிற பட்டை உடுத்தி கள்ளழகர் கோலத்தில் எழுந்தருளிய சுந்தர்ராஜ பெருமாளை அங்கு சூழ்ந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீரை தெளித்து குளிர்ச்சியுடன் வரவேற்று கள்ளழகரை தரிசனம் செய்து வழிபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Madurai Chithirai Festival, Paramakudi Constituency, Ramanathapuram