ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் குதிரை வளர்ப்பவர்கள் குதிரைகளை அலங்கரித்து மேளங்கள் இசைத்து இசைக்கு ஏற்றாற்போல் குதிரைகளை நாட்டியமாடி வைத்து கால்நடை பொங்கலை சிறப்பாக கொண்டாடினர்.
ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் 50-க்கும் மேற்பட்டோர் நாட்டியக் குதிரைகளை வளர்த்து மாவட்டத்தில் நடைபெறும் திருமணம் மற்றும் திருவிழா போன்ற முக்கிய நிகழ்வுகளுக்கு குதிரைகளை நடனமாட அழைத்து செல்கின்றனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் குதிரை வளர்ப்பவர்கள் மாட்டுப் பொங்கலுக்கு குதிரைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கால்நடை பொங்கல் வைத்து கொண்டாடினர். இதுபோன்ற ஆடுகள், நாய்கள் போன்ற கால்நடைகளை வளர்ப்பவர்கள் நன்றி செலுத்தும் விதமாக கால்நடை பொங்கல் கொண்டாடினர்.
ராமநாதபுரத்தில் 30,000 மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்காட்சி- தொடங்கிவைத்த ஆட்சியர்
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram