ராமநாதபுரம் சாமஸ்தானம் வனசங்கரி அம்மன் கோவிலின் மாககும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராமநாதபுரம் சேதுபதி சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ வனசங்கரி அம்மன் கோயில் 22 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் ஒன்றாம் தேதி யாக சாலை பூஜையுடன் தொடங்கியது. மூன்று நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைக்கு பின் கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை நடைபெற்று. காரையில் சிவாச்சாரியர்கள் வேதமந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு ஸ்ரீ வனசங்கதி அம்மன் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இதையடுத்து, வனசங்கரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில், ஆயிரக்கனக்கான ஆன்மீக பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர். சேதுபதி சமஸ்தானம் சார்பில் வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram