ராமநாதபுரம் மாவட்டம் உச்சப்புள்ளி அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் 500 எடை கொண்ட கடற்பசுவும், 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமையும் கரை ஒதுங்கியது. அவற்றை மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். பின்னர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார் வளைகுடா, பாக்ஜலந்தி உள்ளிட்ட கடல் பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு, நட்சத்திர ஆமை, கடல் குதிரை உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களும், ஜந்து வகையான ஆமைகளும், அரியவகை உயிரினங்களும் வாழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் 500 கிலோ எடை கொண்ட கடல் பசு மற்றும் 50 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் இன்று அதிகாலை கரை ஒதுங்கியது.
இதையும் படிங்க : ராமநாதபுரத்தில் இளைஞர்களுக்கு வேளாண் திறன் மேம்பாட்டு பயிற்சி - தகுதிகள் என்ன?
இதையடுத்து, அதிகாலையில் மீன்பிடிக்க சென்ற அப்பகுதி மீனவர்கள் கரை ஒதுங்கிய கடற்பசு மற்றும் ஆமையை பார்த்து விட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
இந்நிலையில், அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கடற்பசு மற்றும் ஆமையை மீட்டு மருத்துவர்களை வரவழைத்து அவற்றை உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் கடற்கரை ஓரத்திலேயே புதைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram