ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் 400-க்கும் மேற்பட்ட அலுவலக பணியாளர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியாளர்களின் கோரிக்கைகளாக ஊதியத்தை உயர்த்தி வழங்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட கணினி உதவியாளர் பணி வரண்முறை செய்தல், அனைத்து வட்டாரங்களிலும் வட்டார திட்ட அலுவலர் பணியிடத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்டவற்றை இந்த போராட்டத்தில் வலியுறுத்தினர்.
மேலும், ஊரக வளர்ச்சி துறையில் இணை இயக்குநர், உதவி இயக்குனர், உதவி செயற்பொறியாளர், இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் காலதாமதம் இன்றி வெளியிட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாளர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram