முகப்பு /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் கலைநிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடியரசு தின விழா

ராமநாதபுரம் கலைநிகழ்ச்சிகளுடன் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடியரசு தின விழா

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் ஆட்சியர்

Ramanathapuram | ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியை ஏற்றி, பல்வேறுதுறையைச் சார்ந்தவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

ராமநாதபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தின விழா கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது‌. இதில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

இதில், தேசிய கொடியை ஏற்றிவைத்த பின்னர் மூவர்ணங்கள் உடைய பலூன்களைப் பறக்க விட்டப்பட்டு, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் சமாதான புறாக்களை பறக்க விட்டனர்.

இதனையடுத்து, பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கப்பட்டன. இதில் வருவாய்த்துறையினர், பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிக்கும் துறை, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை என ரூபாய் 97 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

குடியரசு தினக் கொண்டாட்டம்.. வண்ண விளக்கொளியில் மின்னும் புதுச்சேரி அரசு கட்டிடங்கள்

இதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் குடியரசு தினம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

First published:

Tags: Local News, Ramanathapuram