குடியரசு தினத்தை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கோவில்கள், கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி நாட்டின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இந்தநிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில், பாம்பன் ரயில் பாலம் ஆகிய முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாம்பன் ரயில் பாலத்தில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதுடன், வெடிகுண்டு தடுப்பு காவல்துறையினர் மெட்டல் டிடெக்டர் கருவிகளை கொண்டு பாலம் முழுவதும் கண்காணித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் | தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram