ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் கிராமத்தில் பழைமையான ஸ்ரீஅரியநாச்சி அம்மன் ஆலயமானது உள்ளது. இங்கு 46ம் ஆண்டு முளைக்கொட்டு திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயமானது வருடா வருடம் நடத்தப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சிறிய மாடு, பெரியமாடு என 2 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த பந்தயத்தில் ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தேனி, உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட வண்டிகளில் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்த காளைகளை திருவிழா வந்த பொதுமக்கள் கண்டு ரசித்தனர். 2 பிரிவுகளிலும் வெற்றிபெற்ற மாட்டுவண்டி வீரர்களுக்கு நினைவு பரிசுகள், ரொக்கப்பரிசும், கேடயங்கள் வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram