18 வயது பூர்த்தியானவர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது குறித்து வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ராமநாதபுரத்தில் வாக்காளர் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியை ராமநாதபுரம் பயிற்சி ஆட்சியர் நாராயண சர்மா கொடியைசைத்து இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்தார். இந்த பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டனர்.
அரண்மனை முன்பிருந்து துவங்கிய இந்த பேரணியானது அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம் போன்ற முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்று நிறைவு பெற்றது.
இப்பேரணியில் கடந்த ஜனவரி மாதம் முதல் 18 வயது பூர்த்தியாகும் நபர்கள் தங்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் பதாகைகளை பதாகைகள் ஏந்தி சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramnad