ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் அருகே உள்ள குனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கணக்கானோர் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய கோரி காலிகுடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் ஒன்றியம் அருகே உள்ள குனங்குளம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
மேலும், குடிநீர் தட்டுப்பாட்டால் ஒருகுடம் ரூ.12 கொடுத்து வாங்கவேண்டிய சூழல் உள்ளதாகவும், சில நேரம் பணம் கொடுத்தாலும் கிடைக்காத சூழல் நிலவுவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தங்களது கிராமத்திற்கு காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்திதர வேண்டும் எனவும், இல்லையென்றால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து குனங்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Protest, Ramanathapuram, Water Scarcity