ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அடுத்த வெண்ணத்தூர் கண்மாய் பாசன பகுதிகளில் தண்ணீர் இன்றி விவசாயம் பொய்த்து, பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகியதால் கருகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் அடுத்துள்ள வெண்ணத்தூர் கண்மாய் தண்ணீரை நம்பி வெண்ணத்தூர், மேட்டுகொள்ளை, பாப்பனந்தல், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்யாததாலும், பாசனத்திற்கு தண்ணீர் வராததாலும் சாகுபடி செய்திருந்த நெல் அனைத்தும் தண்ணீர் இன்றி வறட்சி ஏற்பட்டு கருகியது. கடன் பெற்று பயிரிடப்பட்ட அனைத்தும் கருதியதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் | இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram