முகப்பு /ராமநாதபுரம் /

திடீரென வந்த டூவீலர்.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் பாய்ந்த ராமநாதபுரம் கல்லூரி பேருந்து..

திடீரென வந்த டூவீலர்.. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விவசாய நிலத்தில் பாய்ந்த ராமநாதபுரம் கல்லூரி பேருந்து..

X
ஓட்டுனரின்

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளான கல்லூரி பேர

Ramanathapuram Bus Accident : ராமநாதபுரத்தில் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கல்லூரி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து நான்கு மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி

ராமநாதபுரத்தில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் லாந்தை கிராமத்துக்கு அருகே தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் ராமநாதபுரத்தை சேர்ந்த  ஏராளமான மாணவ, மாணவிகள்  பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரிக்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று காலை ராமேஸ்வரத்திலிருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக் கொண்டுகல்லூரி நோக்கி சென்றது. அப்போது ராமேஸ்வரம்—மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முதுனாள் கிராமம் அருகே செல்லும் போது பேருந்துக்கு முன்னால் திடீரென இருசக்கர வாகனம் வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : தடையை மீறி கச்சத்தீவில் கொடியேற்ற முயன்ற இந்து அமைப்பு- கைது செய்த காவல்துறை

இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை திருப்பும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விவசாய நிலத்தின் அருகே இருந்த பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த நான்கு மாணவர்களுக்கு காயம்பட்டு ஏற்பட்டது. காயமடைந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

First published:

Tags: Accident, College, Local News, Ramanathapuram, Students, Tamil News