அப்துல் கலாம் தேசிய நினைவகத்தில் முகவை சங்கமம் என்ற தலைப்பில் 5-வது புத்தகத் திருவிழாவிற்கான இலச்சினை மற்றும் சின்னம் வெளியிட்டு புத்தக வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு வாசிப்பு திறனை மேம்படுத்த புத்தகங்கள் வழங்கப்பட்டன.
ராமநாதபுரத்தில் நடைபெற்றவுள்ள புத்தகத் திருவிழாவிற்கு முன்னேற்பாட்டு விழாவாக மாபெரும் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி மற்றும் 5-ஆவது புத்தக திருவிழா இலச்சினை மற்றும் சின்னம் வெளியிடும் நிகழ்ச்சி தங்கச்சிமடம் அடுத்த பேய்கரும்பு கிராமத்தில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தேசிய நினைவக வளாகத்தில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது.
முகவை சங்கமம் புத்தக திருவிழாவானது பிப்ரவரி 9-தேதி தொடங்கி, பிப்ரவரி 19-ம் தேதி வரை 10 நாட்கள் ராமநாதபுரம் ராஜா மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் காலை 11-மணிமுதல் மாலை 4-மணி வரை மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிகொள்ள முடியும்.
மேலும் நூறுக்கும் மேற்பட்ட கடைகள் அமைத்து, அதில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்படுவதாகவும், புத்தகத் திருவிழாவில் மாலை 4 மணியில் இருந்து 6 மணி வரை கல்லூரி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.
புத்தக வாசிப்பு நிகழ்ச்சியில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காள்மடம் ஆகிய பகுதிகளில் உள்ள ஐந்து பள்ளிகளில் இருந்து 120 மாணவர்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் புத்தங்களை பெற்று கொண்டனர்.
செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram